தமிழகத்துக்கு காவிரி நீர் தரக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் இன்று உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்தையும் மத்திய அரசையும்வலியுறுத்தி நடிகர் மன்சூர் அலிகான் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருந்தும், அந்த மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் ஒவ்வொருமுறையும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
எனவே நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும், காவிரியில் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (இன்று) உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்சூர் அலிகான் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications