சிவாஜிக்கு நினைவாலயம்: இலவச நிலம் வழங்கியது அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நினைவாலயம் கட்டுவதற்காக 11.81 கிரவுண்ட் நிலத்தை தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்துள்ளது.
சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, சிவாஜிக்குநினைவாலயம் எழுப்ப இடம் வழங்குமாறு நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நடிகர் சங்கத்தின் தலைவர் விஜயகாந்த்திடம் ஜெயலலிதா உறுதிகூறியிருந்தார்.
சிவாஜி மறைந்து தற்போது ஒரு ஆண்டு ஆன நிலையில், அவருக்கு நினைவாலயம் எழுப்ப அடையாறு பகுதியில்உள்ள ஆந்திர மகிள சபாவுக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை (11.81 கிரவுண்ட்) இலவசமாகஅளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலம் விரைவில் நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications