புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்ட வாலிபர்
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த பட்டறை உரிமையாளர் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சேலம்-அழகாபுரம் காட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பட்டறை வைத்துள்ளார். பட்டறையைவிரிவுபடுத்துவது தொடர்பாக தனது வீடு மற்றும் நில ஆவணங்களை அடகு வைப்பதற்காக கடந்த 18ம் தேதிஅவர் வீட்டை விட்டுச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு வீடு திரும்பாததையடுத்து பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் செல்வத்தின் பட்டறையில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் மூலம் செல்வம் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது ரஜினி என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து பாண்டிச்சேரியில் ரஜினி பதுங்கியிருப்பது குறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால்அதற்குள் ரஜினி அங்கிருந்து தப்பி விட்டார். செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மட்டும் சிக்கியது.
இதையடுத்து சீனிவாசனிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில், ரஜினிக்கு சொந்தமான நிலத்தில் செல்வம்புதைக்கப்பட்டது தெரிய வந்தது. சீனிவாசன் அடையாளம் காட்ட, அங்கிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.அழுகிய நிலையில் இருந்த செல்வத்தின் கைகளும், கால்களும் கட்டப்பட்டிருந்தன.
ரஜினிக்கு சொந்தமான பாழடைந்த பங்களாவில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க தலைச்சன் ஆண்மகனைபழி கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறியதால் செல்வத்தை ரஜினி கொன்று நரபலி கொடுத்துள்ளதாககூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாகியுள்ள ரஜினியைத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications