ஜெ., சசி மீதான டான்சி வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோருக்கு எதிரான டான்சி வழக்கின்விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறைத் தண்டனை வழங்கி கடந்த திமுகஆட்சியில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார். இதனால் கடந்த ஆண்டு மே மாதம்நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில்ஜெயலலிதாவையும் சசிகலவையும் விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீதிபதி தினகர்தீர்ப்பளித்தார்.
இதையடுத்து தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞரான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜேந்திர பிரசாத் மற்றும் நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி ஆகியோர் கடந்த சிலநாட்களாக டான்சி வழக்கை விசாரித்து வந்தனர்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகநீதிபதிகள் அறிவித்து விட்டனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய டான்சி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாககடந்த வாரம் அவருடைய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதுநினைவிருக்கலாம்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மற்றொரு வழக்கில், டான்சி நிலத்தை அரசிடம்திரும்ப ஒப்படைக்கத் தயார் என்று சசிகலாவும் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications