ஜெ., சசி மீதான டான்சி வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோருக்கு எதிரான டான்சி வழக்கின்விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறைத் தண்டனை வழங்கி கடந்த திமுகஆட்சியில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார். இதனால் கடந்த ஆண்டு மே மாதம்நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில்ஜெயலலிதாவையும் சசிகலவையும் விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீதிபதி தினகர்தீர்ப்பளித்தார்.
இதையடுத்து தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞரான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜேந்திர பிரசாத் மற்றும் நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி ஆகியோர் கடந்த சிலநாட்களாக டான்சி வழக்கை விசாரித்து வந்தனர்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகநீதிபதிகள் அறிவித்து விட்டனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய டான்சி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாககடந்த வாரம் அவருடைய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதுநினைவிருக்கலாம்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மற்றொரு வழக்கில், டான்சி நிலத்தை அரசிடம்திரும்ப ஒப்படைக்கத் தயார் என்று சசிகலாவும் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications