திருப்பூரில் இன்றும் கலவரம்: வழிபாட்டுத் தலத்துக்கு தீ வைப்பு, 4 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நேற்றைய பந்த்தின் போது 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதனால்அங்கு பெரும் பதற்றம் நிலவி வரும் நேரத்தில் இன்று ஒரு வழிபாட்டுத் தலமும் ஒரு பனியன் கிடங்கும் தீ வைத்துஎரிக்கப்பட்டன.

கத்திக் குத்து சம்பவங்களில் காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குஜராத் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நேற்று நாடு முழுவதிலும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் "பாரத் பந்த்"நடந்தது. தமிழகத்தில் திருப்பூரில் மட்டும் பந்த்துக்கு ஆதரவு இருந்தது.

திருப்பூர் பெரிய கடை வீதி, பெரிய தோட்டம் பகுதிகளில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி இந்துமுன்னனியைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தினர். அந்தக் கடைகள் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்றுதெரிகிறது.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கடைகள் சூறையாடப்பட்டன. சிலகடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பலருக்குக் கத்திக் குத்து விழுந்தது. அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒரு கும்பல் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ஒரு வீட்டிற்கு தீவைத்தது. அப்போது அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து அவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதில் சில பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். மாணிக்கம்பாளையத்தில்வி.எஸ்.ஏ. நகரில் உள்ள இந்தத் அந்தத் தலம் முழுவதுமாக எரிந்து நாசமானது.

அதே போல பொன்முத்து நகரில் சிறுபான்மைப் பிரிவினருக்குச் சொந்தமான ஒரு பனியன் கிடங்குக்கும் தீவைக்கப்பட்டது. இதில் அந்தக் கிடங்கும் அதில் இருந்த துணிகளும் முழுவதும் எரிந்துபோயின. இதில் பல லட்சம்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தையடுத்து திருப்பூரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து அங்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

இன்று அங்கு அமைதி நிலவினாலும் பலவிதமான வதந்திகளும் புரளிகளும் பரவியவண்ணம் உள்ளன. இதனால்திருப்பூரில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள்பள்ளிக்கு அனுப்பவில்லை.

தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பதற்றமான இடங்களிலும் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படையினர்நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரின் முயற்சியால் அனைத்துக் கட்சிக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று மாலை கூடி விவாதிக்க உள்ளது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்போவதாக இந்தக் குழுவில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலெக்டரிடம் உறுதிமொழி தந்துள்ளனர்.

இந் நிலையில் நேற்றைய கத்திக் குத்து சம்பவங்களில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மோசமாகஇருப்பதாகக் தெரியவந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+