நாளை தமிழக ரயில்களை குறிவைத்து மறியல் போராட்டம்: கோவை ரயில் ரத்து
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடக் கூடாது என்று வலியுறுத்தி நாளை பெங்களூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள்திட்டமிட்டுள்ளன. இதையடுத்து பெங்களூர்- கோயம்புத்தூர் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை தமிழகத்துக்கான பிற ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும் அபாயம்உள்ளது.
தமிழர்களை தீவிரவாக எதிர்த்து வரும் கன்னட சாளுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழர் மீதான தாக்குதலில் முக்கிய பங்குவகிக்கும் நாராயண குமார் ஆகியோரின் தலைமையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இதற்காக மாண்டியா, மைசூர், பெங்களூர் ஊரக மாட்டங்களில் இருந்து டிராக்டர்கள், லாரிகள்,வேன்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாளை பெங்களூர் வருவார்கள் என விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டண்ணா கூறியுள்ளார்.
மெஜஸ்டிக் ரயில் நிலையம், கண்டோன்மென்ட், ஒயிட் பீல்ட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையஙகளில் நுழைந்து ரயில்களைத்தடுப்போம் என இவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே மாண்டியா, மைசூரில் தொடர்ந்து இவர்கள் நடத்தி வரும் ரயில் மறியலால் அந்தப் பகுதியில் ரயில்போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்களையும் அவ்வப்போது தடுத்து வருவதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந் நிலையில் வாட்டாள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் ரயில்களை இந்தக்கும்பல்கள் குறி வைக்கலாம்.
இதையடுத்து நாளை கோவையில் இருந்து பெங்களூர் வரும் ரயிலும் பெங்களூரில் இருந்து கோயமபுத்தூர் செல்லும் ரயிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 5.15 மணிக்குப்பதிலாக காலை 11.00 மணிக்குத் தான் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக விரோதிகள் தமிழகத்தில் இருந்து வரும் பிற ரயில்களைத் தாக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவற்றுக்கு போதிய பாதுகாப்பு தரவேண்டும்.
ஆனால், கர்நாடக அரசு இந்தப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் தமிழக பயணிகள்பயணத்தை ஒத்தி வைப்பது அல்லது பஸ்களில் பெங்களூர் வருவது நல்லது.
-->
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications