நாளை "பொடா" நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரானவைகோ நாளை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கருதப்படும் வைகோ கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்வைகோ. இதுவரை அவருக்கு இரண்டு முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் முடிவதைத் தொடர்ந்து, நாளை சென்னை-பூந்தமல்லியில் உள்ளபொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக நாளை காலை அவர் வேலூர்சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்படுகிறார்.
அவருக்கு பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதியான எல். ராஜேந்திரன் மேலும் காவல் நீட்டிப்பு வழங்குவார் என்றுதெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தன் சார்பில் தானே வாதாடுகிறார் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகசிறையிலேயே இரவு, பகலாக சட்டப் புத்தகங்களையும் அவர் படித்து வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications