சுடுகாட்டில் சிசுக்களை வீசியவர் ஆண்டிப்பட்டி டாக்டர்
மதுரை:
ஆண்டிப்பட்டி சுடுகாட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட 11 சிசுக்களை போட்டது யார் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர் ஒருவர் அவராகவே போலீஸில் ஆஜராகி நடந்தவற்றைக் கூறியுள்ளார்..
முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் உள்ள சுடுகாட்டில், சில நாட்களுக்கு முன்பாட்டில்களில் அடைக்கப்பட்ட 11 சிசுக்களின் ஸ்பெசிமென்கள் வீசப்பட்டிருந்தன.
இது தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. அதை வீசியது யார் என்று போலீஸார் சல்லடை போட்டுவிசாரித்துக் காண்டிருந்தனர்.
இந் நிலையில் அந்த சிசுக்களை வீசியவர் டாக்டர் நாராயண சாமி என்று தெரியவந்தது.
அவராகவே ஆண்டிப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
அதில், தான் நடத்தி வரும் கிளினிக்கில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சிசுக்களை வைத்திருந்தாகவும், சிலஆய்வுகளையும் நடத்தி வந்ததாகவும், இப்போது அவை தேவையில்லை என்பதால் சுடுகாட்டில் வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசுக்கள் வீசப்பட்ட செய்தி வெளியானதும் அதுகுறித்து போலீஸில் தெரிவிக்க நினைத்ததாகவும் ஆனால் என்னநடவடிக்கை எடுப்பார்களோ என்று பயந்து தெரிவிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் டாக்டர் நாராயணசாமி.
இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications