பசு மாடுகளை விஷம் வைத்துக் கொன்ற பாதிரியார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பசு மாடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக ஒரு பாதிரியார் மீதும் அவரது பெண்உதவியாளர் மீதும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மா. புதுப்பட்டியில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராகஇருப்பவர் மரிய ஞானம். இவரது பெண் உதவியாளர் ஜெயசீலி.

சர்ச்சிற்கு அருகே வசிக்கும் சமாதானம்-கலைச்செல்வி தம்பதியரின் மூன்று பசு மாடுகளும் புல் சாப்பிட்ட பிறகுதிடீரென்று இறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்தார் சமாதானம்.

மரிய ஞானத்தின் உத்தரவின் பேரில் ஜெயசீலிதான் புல்லில் விஷம் கலந்து விட்டதாக சந்தேகமடைந்தார்சமாதானம். இதையடுத்து ஊர் மக்களிடம் இதுகுறித்துக் கூறினார்.

உடனடியாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு, இறந்த பசு மாடுகளுடன் சர்ச் முன்பு திரண்டனர். பாதிரியார் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தி ஒரு மாட்டை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதிரியார் மற்றும் ஜெயசீலி ஆகியோர் மீது மாடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+