மழையால் தடைபட்ட இந்தியா-இலங்கை போட்டி இன்று நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐ.சி.சி. கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று மழைகாரணமாகக் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
நேற்று இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா விக்கெட்இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியது.
நீண்ட நேரமாகியும் மழை நிற்காத காரணத்தால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இந்த இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
இன்றும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளும் இந்த சாம்பியன்ஷிப்பைப் பகிர்ந்து கொள்ளும்.
-->












Click it and Unblock the Notifications