"ஹைடெக்" கிரிக்கெட் சூதாட்டம்: 9 பேர் கைது
சென்னை:
இலங்கையின் கொழும்பில் இன்று நடைபெறும் ஐ.சி.சி. கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறப்போவது இந்தியாவா, இலங்கையா என்பது குறித்து சென்னையில் சூதாட்டம் நடத்திய 4 இன்டர்நெட் மையஅதிபர்கள் உள்ளிட்ட 9 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இங்கு ரூ. 15 கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகள் கொழும்பில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில்இந்திய-இலங்கை அணிகள் மோதின. ஆனால் பாதியிலேயே மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டு இன்றுநடந்து வருகிறது.
இந்நிலையில் ஐ.சி.சி. போட்டிகளை வைத்து சென்னையில் "ஹைடெக்" சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.அண்ணாநகர், தியாகராய நகர் மற்றும் மாம்பலம் போன்ற பகுதிகளில் இ-மெயில் மூலமாக இந்தச் சூதாட்டம் படுஜரூராக நடந்தது.
சூதாட்டம் நடப்பது குறித்துப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை மாநகரப் போலீஸ்கமிஷனர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையிலான போலீசார்இன்று காலை குறிப்பிட்ட இன்டர்நெட் மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமானவர்கள் இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நான்குஇன்டர்நெட் மைய அதிபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும் சூதாட்டப் பணம் ரூ.19,000-த்தையும், 34 செல்போன்களையும், லேப்டாப்கள் உள்பட பலகம்ப்யூட்டர்களையும், சூதாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் அடங்கிய சி.டிக்களையும் மற்றும் சிலஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளின் போது நடந்த சூதாட்டங்களில் மட்டும் சுமார் ரூ.15 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும் ரூ.1 கோடி வரை சூதாட்டம்நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சூதாட்டக்காரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்டிய பின்னர் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications