டெல்லி பயணத்தை ரத்து செய்தார் ஜெ
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாதன்னுடைய டெல்லி பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அதற்காக அமைக்கப்பட்ட நதி நீர் ஆணையம் சரியாகச் செயல்படாத காரணத்தால் அந்தஆணையமே தேவையில்லை என்று ஜெயலலிதா கூறி வருகிறார்.
இந் நிலையில் ஜெயலலிதாவும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுசமீபத்தில் வாஜ்பாய் கூறியிருந்தார். கிருஷ்ணாவும் பேச்சு நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயலலிதா அவர்கள் இருவருக்கும் சூடாகப்பதிலளித்து விட்டார். நேற்று வெளியிட்ட அறிக்கையிலும் அவர் பிரதமரைக் காரசாரமாக விமர்சித்து இருந்தார்.
இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக தலைவர்களான அண்ணாதுரை, சத்தியமூர்த்தி மற்றும்முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்றுடெல்லி செல்லத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
அவருக்குப் பதிலாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் ஆகியோர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வாஜ்பாய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் டெல்லி சென்றுள்ள கிருஷ்ணாவை சந்திப்பதைத் தவிர்க்கவுமேஜெயலலிதா இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
-->












Click it and Unblock the Notifications