அரசை எதிர்த்துப் போராட்டம்: 8,000 மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கைது
சென்னை:
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை முடக்கமுயன்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுமார் 8,000 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக, மத்திய அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தான் எண்ணற்ற தமிழக மக்கள்வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர் என்று சென்னை போராட்டத்தில் கலந்து கொண்டஅக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் அவர் தலைமையிலான சுமார் 3,000 தொண்டர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் போராட்டம்நடத்தினர். இதையடுத்து வரதராஜன், எம்.எல்.ஏவான மகேந்திரன் உள்ளிட்ட அனைத்து மார்க்சிஸ்ட்தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மதுரை எம்.பியான மோகன், எம்.எல்.ஏவான நன்மாறன் உள்ளிட்ட சுமார் 2,000 மார்க்சிஸ்ட்தொண்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், 2,000 தொண்டர்கள் கோயம்புத்தூர்மாவட்டத்திலும் 100 பெண் தொண்டர்கள் உள்ளிட்ட 500 பேர் சேலம் மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலான தொண்டர்கள் அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுக்க முனைந்த போதும், சேலம்மாவட்ட தொண்டர்கள் சாலை மறியல் செய்த போதும் கைதாகினர். சாலை மறியல் போராட்டம் நடந்த இடங்களில்போக்குவரத்து சிறிது நேரத்திற்குப் பாதிக்கப்பட்டது.
மதுரையில் நடந்த போராட்டத்தின் போது பேசிய மோகன், தமிழக அரசுக்கு திமுக உருப்படியான யோசனையைஅளிக்கத் தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
ரேஷன் கடை அரிசி விலை உயர்வு, மத்திய அரசின் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல அரசு நடவடிக்கைகளைஎதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
-->












Click it and Unblock the Notifications