மதுரையில் பெரியார் சிலை உடைப்பு: உடனே புதிய சிலை வைக்கப்பட்டது
மதுரை:
மதுரையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தஇடத்தில் உடனடியாக மற்றொரு புதிய பெரியார் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் தணிந்தது.
மதுரை-கரிமேடு மார்க்கெட் பகுதியில் ஒரு பெரியார் சிலை இருந்தது. ஒரு கும்பல் இந்தச் சிலையை உடைத்துச்சேதப்படுத்தி விட்டு ஓடிவிட்டது.
சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது மதுரைக்கு வந்திருந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கருப்பசாமியிடம் இத்தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரியாரின் புதிய மார்பளவு சிலை ஒன்றை அதே இடத்தில் வைக்க அவர்உத்தரவிட்டார்.
உடனடியாக ஒரு புதிய பெரியார் சிலை தயாரிக்கப்பட்டு, அதே இடத்தில் வைக்கப்பட்டது. அந்தச் சிலைக்குஅமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் தணிந்தது. சிலையை உடைத்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications