நாங்கள் சும்மா இருக்கிறோமா?- ஜெ.வுக்கு பா.ம.க. பதில்
திருச்சி:
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளின் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளது என்று அக்கட்சியைச் சேர்ந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் என்.டி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள 10 அமைச்சர்களும் காவிரிப் பிரச்சினையில் கண்டுகொள்ளாமல் உள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மையில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை எங்களது தலைவர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் வாஜ்பாயைடெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
எங்களது எம்.பிக்கள் குழுவும் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளது.
ஜெயலலிதா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், டெல்லி சென்ற குழுவிலும் எங்களதுகட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். எனவே பாமகவை இந்தப் பட்டியலில் முதல்வர் சேர்த்திருப்பதுசரியல்ல என்றார் சண்முகம்.
அரிசி விலை- பாமக போராட்டம்:
இதற்கிடையே ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் பாட்டாளி மக்கள்கட்சி சார்பில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
இன்று முதல் 5ம் தேதி வரை இப்போராட்டத்தை நடத்துகிறது பாட்டாளி மக்கள் கட்சி. சென்னையில் அக்கட்சித்தலைவர் ஜி.கே. மணி தலைமையில் கிண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் மணி பேசுகையில், இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்களும் நன்றாக ஆதரவுஅளித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே மக்களையும் நாங்கள் அழைத்துக் கொண்டு இனி ரேஷன் கடைகளின் முன்பாகவே போராட்டம் நடத்தப்போகிறோம் என்றார்.
பாமக தொண்டர்கள் அதிகம் உள்ள தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்களிலும் இப்போராட்டம்நடந்தது.
முன்னதாக நேற்று மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே விவசாயிகளும் ஏழை மக்களும் வறட்சிமற்றும் வறுமை காரணமாக வாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் அரிசியின் விலையை ஏற்றியதுஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.
இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 30ம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பா.ம.க. சார்பில்போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் மணி.
-->












Click it and Unblock the Notifications