இமாம் அலி சுட்டு கொலை: போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர் - பெங்களூர்:

இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற தமிழக போலீசின் சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை வகித்த கோவை மாவட்ட டி.ஐ.ஜி.அசுதோஷ் சுக்லாவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்தப் படையில் இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்ட மதுரை துணை கமிஷ்னர் ஷகீல் அக்தருக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

சுக்லாவின் வீட்டிலும் அலுவலகத்திலும் ஏ.கே-47 துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுளளனர்.

இதற்கிடையே இமாம் அலியின் உடலைப் பெற்றுக கொள்வதற்காக அவரது சகோதரி குர்ஷித் பேகமும் அவரது கணவர் ஹமீத்பக்ரியும் இன்று பெங்களூர் வந்துள்ளனர்.

அதே போல அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட சீனியப்பாவின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது தந்தையும், சீனியப்பாவின்மனைவி யாஸ்மீனின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது சகோதரரும் பெங்களூர் வந்தனர்.

அதே போன்று இப்ராகிமின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது உறவினர்களும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் காத்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்களும் பெங்களூர் ராமையா மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று பிரேதப்பரிசோதனை முடிந்தவுடன் இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந் நிலையில் இமாம் அலியுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களுக்கு போலீசார் வலை வீச ஆரம்பித்துள்ளனர். அலியும் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளிகளும் மதுரை, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு போலீஸ்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பஸ்கள் மீது இருவர் கல்வீச்சுத் தாககுதல் நடத்தினர். இவர்கள்இமாம் அலியின் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது. இது குறித்தும் வழக்குப் பதிவு செய்து அந்த சமூக விரோதிகளை போலீசார்தேடி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+