லண்டனில் 12ம் தேதி டோனி பிளேர்- வாஜ்பாய் சந்திப்பு
லண்டன்:
தீவிரவாதத்துக்கு எதிராக இங்கிலாந்துடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்த வரும் 11ம் தேதி பிரதமர் வாஜ்பாய்லண்டன் செல்கிறார்.
12ம் தேதி இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த ஓராண்டில் இருதலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இது 4வது முறையாகும்.
முன்னதாக 7ம் தேதி வாஜ்பாய் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். 8ம் தேதி சைப்ரஸ் தலைநகர் நிகோசியா செல்லும் வாஜ்பாய்அந் நாட்டு அதிபர் கிளாப்கோஸ் கிளரிட்ஜசுடன் பேச்சு நடத்துகிறார். ஐ.நாவில் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தரஉறுப்பினர் அந்தஸ்து தர சைப்ரஸ் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
9ம் தேதி வாஜ்பாய் டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் செல்கிறார். அங்கு இந்திய- ஐரோப்பிய யூனியன் மாநாட்டில்பங்கேற்கிறார். 11ம் தேதி லண்டன் செல்கிறார்.
பிளேருடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது இங்கிலாந்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு வாங்கவுள்ள ஹாக் போர்பயிற்சி ஜெட் விமானங்கள் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவுக்கு ரஷ்ய ரேடார் ஹெலிகாப்டர்கள்:
இந் நிலையில் வானில் இருந்தபடியே எதிரிநாட்டு விமானங்களைக் கண்டறியும் அவாக்ஸ் ரேடார்கள் பொறுத்தப்பட்ட நவீனகமோவ் கே-31 ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு இந்த ரகத்தைச் சேர்ந்த 9 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்க உள்ளது. 110 முதல் 115 கி.மீ தொலைவில்வரும் எதிரிநாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்களை இந்த ஹெலிகாப்டர்களால் கண்டுபிடிக்க முடியும். ஒரே நேரத்தில் 200விமானங்களை இதனால் அடையாளம் காண முடியும்.
அதே போல 200 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி நாட்டு கப்பல்களையும் கண்டுபிடிக்க முடியும்.
ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிக் கப்பலிலும் இந்தியாவுக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டு வரும் கிர்வாக் ரக போர்கப்பல்களிலும் இந்த ஹெலிகாப்டர்கள் நிலை நிறுத்தப்படும்.
-->












Click it and Unblock the Notifications