விண்வெளி மையம், கிருஷ்ணர் ஆலயத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இமாம் அலி
மதுரை:
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும், இஸ்கான்கிருஷ்ணர் கோவிலையும் குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், டைரிகளில் இருந்து இந்த விவரம்தெரியவந்தது என தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூர் விமான நிலைய சாலையில் இந்திரா நகரில் தான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) செயற்கைக்கோள் தயாரிப்பு மையம் உள்ளது. மேலும் பல விண்வெளி ஆராய்ச்சிகளும் இங்கு நடந்து வருகின்றன.
இந்த இஸ்ரோ மையத்தின் வரைபடம் இமாம் அலி கொல்லப்பட்ட வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதே போல பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் ஹரே கிருஷ்ணா அமைப்பு கட்டியுள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்கான்கிருஷ்ணர் கோவிலின் வரைபடமும் அந்த வீட்டில் இருந்தது.
இதனால் இந்த இரு இடங்களையும் இமாம் அலி தாக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
மேலும் அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட இமாம் அலியின் டைரியில் இருந்தும் செல்போன்களில் இருந்தும் தமிழக தோல்தொழிற்சாலை உள்பட 15 பேரின் விவரங்கள் சிக்கியுள்ளன. அவர்களை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர்.விரைவில் இவர்களில் சிலர் கைதாகலாம்.
-->












Click it and Unblock the Notifications