தமிழக- கர்நாடக போலீசார் நாளை முக்கிய ஆலோசனை
பெங்களூர்:
இமாம் அலி உள்ளிட்ட கும்பல் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும்விவகாரத்தில் இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால்நாளை கர்நாடகம் வருகிறார்.
கர்நாடக மாநில டி.ஜி.பி. மடியாளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மடியாள் சமீபத்தில் தான் டி.ஜி.பியாக பதவியேற்றார்.இவர் முன்பு பெங்களூர் நகர காவல்துறை ஆணையராக இருந்தவர்.
தடை செய்யப்பட்ட அல்-உம்மா கும்பல் இப்போது அல்-முகாஜிதீன் என்ற பெயரில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த அமைப்பில் தான் இமாம் அலியும் இருந்துள்ளான். இந்த அல்-முகாஜிதீன் (முன்னாள் அல்-உம்மா) அமைப்பில் 32 பேர் மிகமுக்கிய பங்கு வகித்து வருகினறனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் 26 பேர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரில் 4 பேர் பெங்களூரில்சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். மீதியுள்ள 2 பேரில் ஷாஜகான் தலைமறைவாகிவிட்டான். இஸ்மாயில் என்பவன் தமிழகபோலீசாரிடம் பிடிபட்டுவிட்டான்.
இமாம் அலியின் பெங்களூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும், பிற அல்-முஜாகிதீன் உறுப்பினர்களிடம் விசாரணைநடததியதிலும் இந்தத் தீவிரவாதிகளுக்கு பெங்களூர் மிக முக்கிய புகலிடமாக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக போலீசாருடன் இணைந்து செயல்படடால் தான் இவர்களது நடவடிக்கைகளை நிரந்தரமாக ஒடுக்க முடியும்என தமிழக அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே தமிழக டி.ஜி.பி. நெயில்வால் பெங்களூர் வருகிறார். அவர் கர்நாடக டி.ஜி.பி. மடியாள் மற்றும் உளவுப்பிரிவினருடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
பெங்களூரில் இமாம் அலியின் தங்கிருந்த வீட்டை அடையாளம் கண்ட தமிழக போலீசார் உடனடியாக வீட்டை முற்றுகையிட்டுத்தாக்க கர்நாடக போலீசாரின் உதவியை நாடியபோது ஒரு அதர்ச்சி செய்தி காத்திருந்தது.
கர்நாடகத்திடம் தீவிரவாதிகளை எதிர்கொண்டு தாக்கும் பயிற்சி பெற்ற கமாண்டோ படையே இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து கமாண்டோக்களை வரவழைத்துத் தான் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கர்நாடகம் மிகவும் தர்மசங்கடப்பட்டுப் போனது. இதையடுத்து 500 பேர் கொண்ட கமாண்டோ படையை உருவாக்கஅம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக டி.ஜி.பியின் ஆலோசனைகளை நாளைய கூட்டத்தில் கர்நாடகடி.ஜி.பி. கேட்டுப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர வழக்கம்போல வீரப்பன் விவகாரம் குறித்தும், அதிரடிப்படைகள் குறித்தும் இரு மாநில டி.ஜி.பிக்களும் விவாதிப்பர்.
கொளத்தூர் மணியை அனுப்பலாம்...
இதற்கிடையே வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க தற்போது சிறையில் இருக்கும் கொளத்தூர் மணியை தூதராகஅனுப்புவதில் எந்தத் தவறும் என கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.
-->
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications