காஷ்மீரில் தலைதூக்கியது தீவிரவாதம்: 10 பேர் பலி
ஜம்மு:
காஷ்மீரில் இன்றும் தீவிரவாதிகள் ஒரு பஸ்சை வெடிகுண்டு வைத்து தகர்த்ததில் 2 பயணிகள் கொல்லப்பட்டனர்.வேறு பல தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் நேற்று மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்த போது பல்வேறு இடங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். தேர்தலைத் தடுக்கும் விதமாக வாக்குச் சாவடிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இந்தச் சம்பவங்களில்25 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த ஒரு ஜீப்பை கண்ணிவெடி மூலம்தீவிரவாதிகள் தகர்த்ததில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் மக்கள் தங்கள் வீட்டை வெளியே வந்து வாக்களிக்கத் தயங்கியதால் 41 சதவீத வாக்குகள் மட்டுமேபதிவாகின.
இந்நிலையில் இன்று காலை 6.25 மணிக்கு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மாண்டா அருகே சென்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஒரு வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. ஜம்மு பஸ் நிலையத்திலிருந்துகிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குண்டு வெடித்தது.
இதில் அந்த பஸ் உடைந்து சிதறி தீப்பிடித்துக் கொண்டது. இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.
பஸ்சின் டீசல் டாங்க்கில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டைம்-பாம் ரக குண்டு தான் வெடித்ததாகப் போலீசார்தெரிவித்தனர்.
இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரின் அருகே இன்று காலை சுமார் 8 மணிக்குதீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் கூப்வாரா மாவட்டத்தில் ஹெய்ஹாமா கிராமத்தில் இரண்டு தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்உள்ளிட்ட மூன்று பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் மூன்று கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஆறு சட்டசபைத் தொகுதிகளுக்கு மட்டும்தான் கடைசிக் கட்டத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications