போனஸ்: கட்சிகளின் ஆதரவை நாடும் அரசு ஊழியர்கள்
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி முதல் நடத்தவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 23ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் எதிரொலியாகவே இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சந்திப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டுப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சங்க முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் வரும் 23ம் தேதி முதல் தங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்துக்கழகம், மின் வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தொ.மு.ச. பேரவையின் தலைவரான குப்புசாமி இதை இன்றுசென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications