உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
ஓட்டேரியைச் சேர்ந்த துரை என்பவர் சாலை விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
ஆனால் அது காலம் கடந்த வழக்கு என்று கூறி நீதிமன்றம் துரையின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த துரை கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் விதமாகத் தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்களும் போலீசாரும் துரையை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரைப் போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications