கன்னட டி.வி. சேனல்களுக்கு தடை: தமிழகத்தில் பதிலடி
கோயம்புத்தூர்:
கர்நாடகாவில் தமிழ் டி.வி. சேனல்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக கேபிள்டி.வி. ஆபரேட்டர்களும் பதிலடியாக கன்னட சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தி விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் கட்டமாக கன்னட டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டன.
"காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து அனைத்து கன்னட சேனல்களின்ஒளிபரப்புகளையும் நிறுத்தியுள்ளோம்" என்று சில ஆபரேட்டர்கள் "பிளாஷ் நியூஸ்" போல ஓடவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கன்னட டி.வி. சேனல்கள்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கமே நேரடியாக இந்தத் தடை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பஸ் போக்குவரத்து குறைவு:
இதற்கிடையே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மிகவும் குறைந்த அளவிலான பஸ் போக்குவரத்துமட்டுமே உள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தமிழகத்திலிருந்து அம்மாநிலத்திற்கு ஓடிக் கொண்டிருந்தபெரும்பாலான பஸ்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டன.
தனியார் ஆம்னி பஸ்கள் மட்டும் (அதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே) ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழகஅரசு பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications