நாளை ஜெயலலிதாவை சந்திக்கிறார் பாரதிராஜா
சென்னை:
தமிகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து நெய்வேலியில் தாங்கள் நடத்தவுள்ளபோராட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் இயக்குநர் பாரதிராஜா விளக்கவுள்ளார்.
வரும் 12ம் தேதி தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் பிரம்மாண்டமான பேரணிப் போராட்டம் நடத்திகர்நாடகத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
அன்றைய தினம் பேரணிப் போராட்டம் நடத்துவது தொடர்பாக நெய்வேலி போலீசாரிடம் பாரதிராஜாதலைமையிலான ஒரு குழுவினர் நேற்று அனுமதி வாங்கிவிட்டனர்.
இந்நிலையில் பாரதிராஜா தலைமையிலான மற்றொரு குழுவினர் நாளை சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்கவுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவும் நேரம்ஒதுக்கியுள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு முதல்வரைச் சந்திக்கவுள்ள இந்தக் குழுவினர், தங்களுடைய போராட்டம் குறித்துவிளக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications