100 அவமதிப்பு போட்டாலும் சந்திப்போம்: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகம் 100 அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தாலும் அதை சந்திப்போம் என கர்நாடக சட்ட அமைச்சரே நீதிமன்றத்துக்குஎதிராக சவால் விட்டுப் பேசினார்.
சட்ட அமைச்சரான சந்திரே கெளடா நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்துக்கு எதிராகப் பேசும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெச்சூரிட்டி இல்லை. இதில் மத்திய அரசு தலையிட்டுதமிழகத்தை கண்டிக்க வேண்டும்.
100 அவமதிப்பு வழக்குப் போட்டாலும் அதை சந்திப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே நாங்கள்புறக்கணிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தால் எந்த மாநில அரசையும் கலைக்க முடியாது.
இதில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்றார்.
ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சரே நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தை இவ்வாறு அலட்சியப்படுத்தி பேசியிருப்பது இந்தியாவின்வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications