பாண்டிச்சேரியிலும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காரைக்காலுக்குத் தண்ணீர் வழங்காத கர்நாடக அரசின் போக்கு குறித்து விவாதிக்க பாண்டிச்சேரியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் ரங்கசாமி.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலுக்கு உரிய காவிரி நீரை வழங்காமல் பிடிவாதம்பிடிக்கும் கர்ஞூடக அரசைக் கண்டித்தும், அடுத்த கட்ட ஞுடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் ரங்கசாமி இன்றுஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, கர்நாடகத்தைக் கண்டித்து கன்னட டிவி சேனல்களின் ஒளிபரப்பை பாண்டிச்சேரி மாநில கேபிள்டிவி ஆபரேட்டர்கள் சங்கமும் நிறுத்தி வைத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications