இங்கிலாந்து செல்லும் தஞ்சை வாழைப் பழங்கள்
தஞ்சாவூர்:
தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வாழைப் பழங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் வாழைப் பழங்கள் அதிகஅளவில் விளைகின்றன.
அதிக சுவையுடனும், சத்துடனும் இருக்கும் இந்த வாழைப்பழங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும்உரிமையை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எடுத்துள்ளார்.
இதையடுத்து முதல் கட்டமாக 18 டன் பூவன் வகை பழங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 54 டன்வாழைப் பழங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாழைப் பழங்கள் படிப்படியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும்ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications