For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெய்வேலியில் பாரதிராஜா: போராட்டம் நடத்த 3 இடங்கள் தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

நெய்வேலி:

நெய்வேலியை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டஅதிகாரிகளுடன் இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான திரையுலகக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்தியது.

நெய்வேலியில் தமிழக திரையுலகினர் சார்பில் கர்நாடகத்தைக் கண்டிக்கும் போராட்டம் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கவும், போராட்ட முறை குறித்து முடிவு செய்யவும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில்12 பேர் அடங்கிய குழுவினர் நெய்வேலி சென்றனர்.

இக்குழுவினர் இன்று நெய்வேலியில் மாவட்டஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜீவ் குமார்ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.

இதில் நெய்வேலி மின் நிலையத்தின் தலைமை அலுவலகம், இந்திரா நகர், மின் நிலையத்தின் 2வது பிரிவின் வாயில் ஆகியஇடங்களில் ஒன்றில் போராட்டம் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பான இடமாகவும் அதே நேரம் நெரிசல் ஏதும் ஏற்பட்டு அசம்பாவிதம்நடந்துவிடாமல் இருக்கவும் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

இன்று சென்னை திரும்பும் பாரதிராஜா போராட்டம் தொடர்பான விரிவான விவரங்களை இன்று இரவு அறிவிக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X