தமிழக பந்த்துக்கு சு.சுவாமி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை அழைப்பு விடுத்துள்ள பந்த் மூலம் விவசாயிகளுக்கு உரிய நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்றகடமையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நழுவப் பார்க்கிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

பந்த் காரணமாக ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. தினக் கூலி பெற்று வரும்ஏராளமான ஏழைத் தொழிலாளர்களுக்கு நாளைய பிழைப்பில் மண் விழுந்துள்ளது.

மேலும் உரிய போக்குவரத்து வசதி கிடைக்காமல் வயதானவர்களும் பெண்களும் கடும் அவதிப்படப்போகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் மட்டுமல்லாமல் வேறு பல உயர் நீதிமன்றங்களும் கூட பந்த் நடத்துவதைத் தடை செய்துள்ளன.எனவே பந்த் நடத்துவது ஒரு சட்ட விரோதமான செயலாகும்.

மேலும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வதை விட்டுவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிபந்த் நடத்த தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளது தவறானது.

இதனால் காவிரி விவசாயிகளுக்கு எவ்வழியிலாவது நீர் பெற்றுத் தர வேண்டும் என்ற தன்னுடையபொறுப்பிலிருந்து ஜெயலலிதா நழுவப் பார்க்கிறார் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+