For Quick Alerts
For Daily Alerts
Just In
பாண்டிச்சேரியில் "காவிரி" பந்த்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் இன்று நடந்த பந்த்தைப் போலவே பாண்டிச்சேரியிலும் இன்று 12 மணி நேர பந்த் அமைதியாக நடந்துமுடிந்தது.
காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்திபாண்டிச்சேரியில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பந்த் காரணமாக வாகனப் போக்குவரத்து முழுவதுமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான பெட்ரோல்பங்க்குகளும் கூட மூடப்பட்டிருந்தன.
மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவமும்நிகழாமல் இன்று மாலை 6 மணியுடன் பாண்டிச்சேரி பந்த் அமைதியாக முடிவடைந்தது.
Comments
Story first published: Wednesday, October 9, 2002, 5:30 [IST]