நெய்வேலி போராட்டத்தில் ரஜினி பங்கேற்க மாட்டார்
சென்னை:
நெய்வேலி போராட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. தனது ரிஷிகேஷ் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பிவிட்டார்.
இந் நிலையில் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய விஜய்காந்த் விமான நிலையத்தில்நிருபர்களிடம்பேசுகையில்,
ரிஷிகேஷில் இருந்த ரஜினியுடன் நான் லண்டனில் இருந்து பலமுறை பேசினேன். நடிகர் சங்கம் தனிப்பட்ட முறையில் ஏதாவதுபோராட்டம் நடத்தினால் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் இப்போது பாரதிராஜா தலைமையில் நடக்கும் நெய்வேலிபோராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் ரஜினி கூறிவிட்டார்.
இதனால் அவர் நெய்வேலி போராட்டத்துக்கு வர மாட்டார் என்றார் விஜய்காந்த்.
முன்னதாக விஜய்காந்தும் லண்டனுக்கு ஓடியதை அடுத்து அவரும் வருவாரா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால்,திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டதால் நிச்சயமாக போராட்டத்தில் பங்கேற்பேன் என்று அறிவித்தார். அதுபோலவே தனதுலண்டன் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் இடையிலும் தமிழக மக்கள் இடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போவதுநிச்சயம்.












Click it and Unblock the Notifications