ரூ.30 லட்சம் மதிப்பு "ஸ்டீராய்டு" கடத்தியவர் கைது
சென்னை:
ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள "ஸ்டீராய்டு" போதைப் பொருட்களைக் கடத்தியதில்தொடர்புள்ள முக்கியக் குற்றவாளியை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
நாஸிர் உர் ரஹ்மான் என்ற அந்த நபர் பலர் மூலம் இந்தப் போதைப் பொருட்களை ஹாங்காங்கிலிருந்துசென்னைக்குக் கடத்திக் கொண்டிருந்தான்.
இதைத் தெரிந்து கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் அந்நபரைச் சுற்றி வளைத்துக்கைது செய்தனர்.
சென்னைக்குக் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள"ஸ்டீராய்டு" ரகத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த ரூ59 லட்சம் மதிப்புள்ளஎலெக்ட்ரானிக் சாதனங்கள், வாட்ச்சுகள், செல்போன்கள், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றையும் கஸ்டம்ஸ் துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications