வைகோ சிறைக் காவல் வரும் 28 வரை நீட்டிப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்நீதிமன்றக் காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்துவைகோ கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மூன்று முறை அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி பொடா சிறப்புநீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய காவலை மேலும் ஐந்து நாட்களுக்குநீட்டித்தார் நீதிபதி ராஜேந்திரன்.
பொடா சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி தொடர்ந்து 90 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.வைகோவின் சிறைவாசமும் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் இன்றுடன் 90 நாட்கள் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் இன்று காலை சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோஆஜர்படுத்தப்பட்டார்.
எந்தவிதமான விசாரணையும் இன்றி தொடர்ந்து 90 நாட்கள் தன்னை சிறைக் காவலில் வைத்து விட்டதால்,தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வைகோ இன்று பொடா நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஆனால் இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி ராஜேந்திரன், வரும் 28ம் தேதி வைகோவின் நீதிமன்றக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications