ரஜினியுடன் "கன்னட" நடிகர்களும் உண்ணாவிரதம்?
சென்னை:
தனியாக உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துடன் அர்ஜூன், பிரபுதேவா உள்ளிட்ட சிலகன்னட நடிகர்களும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிகிறது.
ரஜினியுடன் உண்ணாவிரதம் இருக்க தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்கள் சிலர் தயாராகஇருப்பதாகத் தெரிகிறது. அர்ஜூன், பிரபுதேவா, நாகேஷ் (இவரும் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவரே)உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க விருப்பம் தெரிவித்து அவருடன்பேசியுள்ளார்களாம்.
மேலும் ரஜினி நடத்தும் போராட்டத்தில் இயக்குநர் பாலச்சந்தரும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று இவர்கள்வலியுறுத்தியுள்ளார்களாம்.
ஆனால் மற்றொரு முன்னணி கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் இதுவரை எந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போகிறார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. முரளியின் கருத்தும் தெரியவில்லை. ஆனால், பிரகாஷ்ராஜுக்கும் ரஜினிக்கும் எப்போதும் ஒத்து வந்தது இல்லை.
நடிகர் சங்கத்தில் நடைபெறும் கூட்டங்களில் அர்ஜூனும், முரளியும் தவறாமல் கலந்து கொள்கிறார்கள். ஆனால்பிரகாஷ் ராஜைப் பார்க்க முடிவதில்லை.
மேலும் ரஜினி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுப்பாரா என்பதிலும் பெரும்சந்தேகம் நிலவுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்ற காரணத்தைக் காட்டிரஜினி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்:
காங் தலைவர் சோ.பா, இளங்கோவன்: ரஜினிக்கு கர்நாடகத் தொடர்பு இருக்கிறது. எனவே அவர்உண்ணாவிரதம் இருந்தால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவரதுஉண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள்.
இல.கணேசன், பா.ஜ.க.: ரஜினிகாந்த்தின் உண்ணாவிரதத்தை பா.ஜ.க. ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நெய்வேலிபோராட்டத்தை திரையுலகினர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி: ரஜினியுடன் புதிய தமிழகம் தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார்கள்.
திருமாவளவன்: உண்ணாவிரதத்தை வரவேற்கிறோம். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொள்வார்கள்.அதே நேரத்தில் இரு இடங்களில் போராட்டம் நடத்தி ஒற்றுமையை நடிகர்கள் குலைக்கக் கூடாது. நடிகர்கள் ஒற்றுமையைக்குலைக்க திமுகவும் அதிமுகவும் சதி செய்கின்றன. ( சில நாட்களுக்கு முன்பு வரை இவர் ரஜினியை கடுமையாகவிமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
யசோதா, காங்கிரஸ்: இது துரதிர்ஷ்டவசமான முடிவு.
வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: இது சரியல்ல. கலைஞர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டு தனித்தனியாகபோவது காவிரிப் பிரச்சினையை திசை திருப்பி விடும். நல்ல ஒற்றுமையுணர்வு ஏற்பட்டு வரும் வேளையில்ரஜினிகாந்த் தனியாக போராட்டம் நடத்துவது அந்த ஒற்றுமையை குலைத்து விடும்.
வாழப்பாடி ராமமூர்த்தி: குறுக்கு சால் ஓட்ட நினைக்கிறார்கள் கருணாநிதியும், ரஜினியும். ரஜினி தமிழகத்திற்குஒத்து வர மாட்டார், அதற்கு அவர் உகந்தவர் அல்லர் என்று ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன்.இப்போதாவது அவரது ரசிகர்களும், தமிழக மக்களும், திரையுலகத்தினரும் அவரை சரியாக உணர்ந்துகொண்டனர் என்பது சந்தோஷம் தருகிறது.
கி.வீரமணி: என் வழி தனி வழி என்று படங்களில் கூறுவது போல தனியாக உண்ணாவிரதம் இருப்பது சரியானதீர்வாகாது. திமுக நடிகர்கள் என்று கருணாநிதி பிரித்துக் கூறுவதும் சதி வேலையாகத்தான் கருத முடியுமே தவிரவேறு எப்படி எடுத்துக் கொள்வது?












Click it and Unblock the Notifications