கண்ணிவெடிகள் விவகாரம்: புலிகள்- அரசு விரைவில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இனி புதிதாக கண்ணி வெடிகளை புதைப்பதைத் தவிர்க்க விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என இலங்கை அரசுஅறிவித்துள்ளது.
மனிதர்களுக்கு எதிராக கண்ணி வெடிகளைப் பயன்படுத்துவது உலக அளவில் தடை செய்யப்பட உள்ளது. இதற்கான சர்வதேசமாநாடு ஒட்டாவாவில் நடக்க உள்ளது. அப்போது அனைத்து நாடுகளும் இதில் கையெழுத்திட உள்ளன.
இந் நிலையில் இலங்கையில் கண்ணி வெடிகளை புதைப்பதை அதற்கு முன்னதாகவே நிறுத்திவிடும் வகையில் அரசும், புலிகளும்பேச்சு நடத்த உள்ளதாக அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.
ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் புலிகளிடம் இருந்து உறுதி மொழி பெற்றுவிட முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications