""கர்நாடகத்திற்கு "ஒன் அவர் பவர் கட்" செய்தாலே போதும்""
சென்னை:
கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் மின்சாரத்தை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் நிறுத்தி வைத்துஅம்மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் அமைப்புகூறியுள்ளது.
இந்த அமைப்பின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுக்கிறோம்.
இதையொட்டி வரும் 12ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை தமிழக மக்கள் அனைவரும் தங்களதுவீடுகளுக்கு முன்பு காலிக் குடங்களை வைத்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்று பாரதிராஜா கூறியிருப்பதைவரவேற்கிறோம்.
தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் மின்சாரத்தை ஒரு மணி நேரம் மட்டுமாவதுநிறுத்தி அம்மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும்.
அதேபோல, காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து பிரதமர் வாஜ்பாய்க்குதமிழக மக்கள் கண்டனத் தந்திகள் அனுப்ப வேண்டும்.