நாகப்பா கடத்தல்: கிருஷ்ணாவுடன் மகாதேவசாமி சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக காட்டுக்குள் தூது செல்வது குறித்துஅம்மாநில முதல்வர் கிருஷ்ணாவிடம் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் மகாதேவசாமி பேச்சுநடத்தினார்

மகாதேவசாமியுடன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர்மணியையும் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் நாகப்பாவைக் கொன்று விடுவேன்என்றும் வீரப்பன் தான் அனுப்பிய கேசட்டில் மிரட்டியிருந்தான்.

அவர்கள் எட்டு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கடந்த 6ம் தேதி அனுப்பிய கேசட்டில் வீரப்பன்கூறியிருந்தான்.

கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவதில் சட்டரீதியாகப் பிரச்சனைகள் உள்ளன என்று கர்நாடக அரசுஅறிவித்துள்ளது. ஆனாலும் தூது செல்ல மகாதேவசாமி தயாராகத் தான் உள்ளார்.

இந்நிலையில் மகாதேவசாமியும் நாகப்பாவின் மகன் பிரீதம் மற்றும் மருமகன் கிரண் ஆகியோர் நேற்றுகிருஷ்ணாவின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர். பத்திரிக்கையாளர்களுக்கு தாங்கள் வருவது தெரியக்கூடாது என்பதால் அவருடைய வீட்டின் பின்புற வாசல் வழியாகச் சென்று கிருஷ்ணாவைச் சந்தித்துவிட்டு, பின்புறவாசல் வழியாகவே அவர்கள் வெளியேறினர்.

அதன் பின்னர் கர்நாடகப் பாதுகாப்பு ஆலோசகரான சீனிவாசலு நிருபர்களிடம் கூறுகையில்,

முதல்வருடன் பேசிய மகாதேவசாமி முதலில் கொளத்தூர் மணியுடன் தான் காட்டுக்குள் தூது செல்வேன் என்றுகூறினார்.

அதன்பின்னர் அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து மகாதேவசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டது.

அதன் பிறகே தனியாகச் சென்று வீரப்பனைச் சந்திக்க மகாதேவசாமி சம்மதம் தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் நாகப்பாவை விடுதலை செய்ய வேண்டும் என்று புதன்கிழமை (இன்று) வானொலிமூலம் வீரப்பனிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என்றார் சீனிவாசலு.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+