காவிரியில் நீர் கோரி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் உடனடியாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ் எழுத்தாளர்கள்மற்றும் பதிப்பாளர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பிரபல எழுத்தாளர்கள் பாலகுமாரன், விக்கிரமன், சா.கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களுடன் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போதிலும் கூட தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்தின்போக்கை உண்ணாவிரதம் இருப்பவர்கள் கண்டித்தனர்.












Click it and Unblock the Notifications