ராக்கெட் லாஞ்ச்சர் விவகாரம்: "போட்டு" கொடுத்து மாட்டிய காங்கிரஸ் பிரமுகர்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் ராக்கெட் லாஞ்ச்சர் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒரு காங்கிரஸ்பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கிரைம் பிராஞ்ச் சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையின் போது ஒரு ராக்கெட் லாஞ்ச்சர்,ஏ.கே.47 துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக ராமேஸ்வரம் நகர தி.க. தலைவர் சிகாமணி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்உள்பட மூன்று பேரைப் போலீசார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளுக்கு டீசல், போதைப்பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வந்துள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய போலீசார் முயற்சித்த போதுஅந்தப் பிரமுகர் அதைத் தெரிந்து கொண்டு சாமர்த்தியமாக லண்டனுக்குத் தப்பி விட்டார்.
இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட் லாஞ்ச்சர் பறிமுதல் வழக்கில் அந்த காங்கிரஸ் பிரமுகரைப் போலீசார்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வியாபாரப் போட்டி காரணமாக இவர் தான் சிகாமணியைப் பற்றி போலீசாரிடம் "போட்டுக்" கொடுத்தாகவும்அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடிச் சோதனையின் போது தான் ராக்கெட் லாஞ்ச்சர் பறிமுதல்செய்யப்பட்டு, சிகாமணியும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள சிகாமணி போலீசார் விசாரணையின் போது காங்கிரஸ் பிரமுகரை பதிலுக்கு"போட்டுக்" கொடுத்ததால் தான், தற்போது அந்த காங்கிரஸ் பிரமுகரையும் வேறு இரண்டு பேரையும் போலீசார்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் பிரமுகரின் கூட்டாளிகளான இன்னும் இரண்டு பேரையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications