சிறுமியைக் கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் 3வது வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய நபரைபோலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சங்கவி 3வது வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சங்கவியை, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்கடத்திச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து கார்த்திகேயனுக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால் தான் சங்கவியை விடுவிப்போம்என்று மிரட்டினர்.
இதுகுறித்து பாண்டிச்சேரி போலீஸில் புகார் செய்தார் கார்த்திகேயன். இதையடுத்து போலீஸார் துரித கதியில்செயல்பட்டு சங்கவி இருக்குமிடத்தைக் கண்டறிந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் சங்கவியை பத்திரமாக மீட்டனர். அவரைக் கடத்திய விஸ்வநாதன்என்பவரையும் கைது செய்தனர்.
தப்பி ஓடிவிட்ட மற்ற இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.