ராக்கெட் லாஞ்சர் வழக்கு: தி.க. பிரமுகர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தில் ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த திராவிடர் கழக பிரமுகர்உள்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் சமீபத்தில் அமெரிக்க தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக அப்பகுதி திராவிடர் கழகத் தலைவர் சிகாமணி மற்றும் ராஜாமணி உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது.
ஆனால் இந்த விசாரணையின் போது, சிகாமணிக்கும் ராஜாமணிக்கும் இதில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசாரால் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications