சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்குமா?
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆனாலும் பல்வேறுமுக்கியமான பிரச்சனைகள் இந்தக் கூட்டத் தொடரில் அலசப்பட உள்ளதால் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறுஅவசர சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
அதில் முக்கியமானது கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவாகும். சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச்சட்டத்திற்கு ஏற்கனவே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் சிறுபான்மை மதத்தினர், சட்டசபைக் கூட்டம் தொடங்குவதையொட்டிநாளையே போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டசபையில் இந்தச் சட்ட மசோதாவை அத்தனை எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பார்கள் என்றேதெரிகிறது. பா.ஜ.க. தவிர அநேகமாக அனைத்து எதிர்க் கட்சிகளுமே இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிராகஅறிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மதமாற்றத் தடைச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் போது சட்டசபையில் அனல் பறக்கும் என்றுதெரிகிறது.
இருப்பினும் ஆளுங்கட்சி தன் சொந்த பலத்திலேயே இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சனையைத் தவிர காவிரிப் பிரச்சினை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, சாலைப் பணியாளர்கள்பிரச்சினை, விரைவில் உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பஎதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மொத்தத்தில் இந்தக் குளிர்கால சட்டசபைக் கூட்டத் தொடரில் கடுமையான அனல் பறக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பின்னர் அக்கட்சி கலந்து கொள்ளும் முதல் சட்டசபைக்கூட்டத் தொடர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications