புலிகளின் அமைதிப் பேச்சு குழுவில் மேலும் 2 பேர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தாய்லாந்தில் நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில்மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 16 முதல் 18ம் தேதி வரை தாய்லாந்தின் சத்தாஹிப் நகரில் நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பாக அதன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் தலைமையில் அவருடைய மனைவிஅடேல் ஆன்னே, புலிகளின் சட்ட ஆலோசகர் வி. ருத்ரகுமார் மற்றும் புனரமைப்பு நிபுணர் ஜெய் மகேஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வரும் 31ம் தேதி தொடங்கவுள்ள இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் புலிகளின் சார்பில்மேலும் இரண்டு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ் செல்வன் மற்றும் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களின்புலிகள் பிரிவு கமாண்டர் கருணா ஆகியோர் தான் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் தற்போதுசேர்க்கப்பட்டுள்ளனர்.

வன்னி பகுதியிலேயே இது நாள் வரை இருந்து வரும் தமிழ் செல்வனும் கருணாவும் அந்தப் பகுதியை விட்டுஅவ்வளவாக வெளியே வந்ததே கிடையாது.

இந்நிலையில் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் இரண்டு பேரும்கொழும்பு வழியாகவே தாய்லாந்துக்குச் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வன்னி பகுதியில் முகாமிட்டுள்ள பாலசிங்கம் கூட சமீபத்தில் லண்டனிலிருந்து கொழும்பு வழியாகத்தான் வன்னிக்கு வந்தார் என்பது நினைவிருக்கலாம். அதிலும் இலங்கையின் அரசு விமானம் மற்றும்ஹெலிகாப்டரையே அவர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனுடன் நார்வே குழுவினர் சந்திப்பு:

இதற்கிடையே கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்குச் சென்ற நார்வே தூதுக் குழுவினர் புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்.

நார்வே வெளியுறவுத்துறை இணை அமைச்சரான விடார் ஹெல்கெசன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவினர்,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனைநடத்தினர்.

இதையடுத்து வன்னிப் பகுதிக்கு விரைந்த நார்வே குழுவினர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்.

வடக்கு இலங்கையில் சீரமைப்பு பணிகளைத் துவங்குவதற்காக அரசு மற்றும் புலிகளின் கூட்டு அதிரடிப்படைகளை நியமிப்பது குறித்து தான் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ரணிலுடன் ஏற்கனவே பேச்சு நடத்திவிட்ட நிலையில், புலிகளையும் சந்தித்து நார்வே குழுவினர்பேச்சு நடத்தினர். அப்போது பிரபாகரன் மட்டுமில்லாமல் பாலசிங்கம், அடேல், தமிழ் செல்வன் ஆகியோரும்உடனிருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். விடார் ஹெல்கெசன் தற்போது தான் முதல் முறையாகபிரபாகரனைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரிகா - நார்வே குழுவினர் சந்திப்பு ரத்து:

முன்னதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் சந்திக்க நார்வே குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால்கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பை சந்திரிகா ரத்து செய்துவிட்டார்.

சந்திரிகாவின் பொறுப்புக்களை முடக்கத் திட்டமிட்டிருந்த ரணில் இது தொடர்பாக ஒரு மனுவை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக் கட்டைபோட்டுவிட்டது.

இதையடுத்து இவ்விஷயத்தில் சந்திரிகாவின் கை ஓங்கியதைத் தொடர்ந்து தான் நார்வே குழுவினருடனானசந்திப்பை சந்திரிகா ரத்து செய்து விட்டதாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+