கணவரை நடுரோட்டில் விட்டு விட்டு "எஸ்கேப்" ஆன அதிமுக எம்.எல்.ஏ
சென்னை:
கணவருடன் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அதிமுக பெண் எம்.எல்.ஏவான கருப்பாயி தன்கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் காரை நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி சென்னை வந்தார்.
குளத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. இவரது கணவர் கருப்பையா. இவருக்கு கருப்பாயி இரண்டாவதுமனைவி ஆவார்.
கருப்பையாவுடன் அவரது முதல் மனைவி தொடர்பாக கருப்பாயி அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாம்.
இந்நிலையில் சென்னையில் நடந்த அதிக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கணவர்கருப்பையா, அக்காள் மகன் மகேஷ் ஆகியோருடன் சென்னை நோக்கி காரில் கிளம்பினார் கருப்பாயி.
கார் மாத்தூர் என்ற இடத்தில் வந்தபோது, கருப்பையாவுக்கும் கருப்பாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வாய்ச்சண்டை வலுக்கவே, திடீரென்று காரை நிறுத்தச் சொன்னார் கருப்பாயி. டிரைவர் குணாவும் காரைநிறுத்தினார்.
பின்னர் உடனே காரிலிருந்து இறங்கிய கருப்பாயி விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். அப்போது அந்தவழியாக வந்த பஸ்சை நிறுத்தி சென்னைக்கு கிளம்பி விட்டார். அவர் பஸ் ஏறிச் சென்று விட்டது காரில்உள்ளவர்களுக்குத் தெரியாது.
காரிலிருந்து இறங்கிய கருப்பாயி நீண்ட நேரமாகியும் திரும்பாததால், காரை விட்டு இறங்கிய கருப்பையாவும்குணாவும் அவரைத் தேடிப் பார்த்தனர்.
ஆனால் அவரைக் காணாததால் பரபரப்படைந்த அவர்கள் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீஸாருக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பின்னர் விசாரித்தபோது தான் கருப்பாயி தனியாக சென்னைக்கு கிளம்பி விட்டது தெரிய வந்தது. இதையடுத்துகருப்பையாவும், மகேஷும் மீண்டும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.












Click it and Unblock the Notifications