தமிழகத்தில் பொடா கைதுகள்: ஆய்வுக் கமிட்டி அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைதுகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த இரு நபர் கமிட்டியை அமைத்துள்ளது. இதன் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர். சண்முகம் உறுப்பினராக இருப்பார் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை பொடா சட்டத்தின் கீழ் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் அடக்கம்.
பொடா சட்டத்தின் கீழ் இந்தக் கமிட்டியை அமைக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications