வங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னை தப்புமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள புயல் சின்னம் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட வட பகுதிகளில் கன மழையும், சூறைக்காற்றும் இருக்கும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு 180 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு வங்கக் கடலில் இந்த புயல் சின்னம் மையம்கொண்டுள்ளது.
இது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப் பட்டனத்திற்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்று தெரிகிறது.
இதன் காரணமாக ஆந்திரக் கடலோர பகுதிகளில் கன மழையும் பயங்கர சூறைக் காற்றும் வீசும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் கன மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications