மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து கிருஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும்இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

சென்னை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஆன்ட்ரூ பேராலய வளாகத்தில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நடக்கிறது.

அதைத் தொடர்ந்து கண்டன மாநாடு ஒன்றுக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திமுக தலைவர்கருணாநிதி இதில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அவர் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சங்கரய்யா, தற்போதைய பொதுச் செயலாளர் வரதராஜன்,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவன் மற்றும் இப்ராஹிம் சுலைமான் சேட் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

மதுரையில்...

இதற்கிடையே மதுரையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் மற்றும்முஸ்லீம்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை முன்னாள் எம்.பியான ராம்பாபு, மதிமுகவின் மெஹபூப் ஜான்,திமுகவின் பால்ராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்று வருகிறது.

சிறுபான்மை பள்ளி ஊழியர்களும் பங்கேற்பு:

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமிழகம் முழுவதிலும் கிறிஸ்தவ மற்றும்இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டு அதன் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஊழியர்கள் மட்டுமில்லாமல் அந்தக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து காண்டுள்ளனர்.

சென்னையில் லயோலா கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி உள்ளிட்ட கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள்மூடப்பட்டுள்ளன.

அதேபோல, மதுரையிலும் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. யூ.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

கோயம்புத்தூரிலும் அனைத்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஓரளவு இஸ்லாமியக் கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தி வரும்ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. பல சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கறுப்புக்கொடிகள் கூட ஏற்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 800 சிறுபான்மை பள்ளிகளில் 450 பள்ளிகள் வரை மூடப்பட்டிருந்தன.கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+