காங். எம்.எல்.ஏக்களுக்கு ஜெயாவின் "உள்ளே... வெளியே..." எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினால் அவர்கள் கூண்டோடுவெளியேற்றப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

சட்டசபையில் போர்க்குணத்துடன் செயல்படுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலாகூறியிருப்பது குறித்துக் கேட்டபோது,

நாங்கள் எப்போதுமே நிதானத்துடன் தான் செயல்படுவோம். டென்ஷன் ஆக மாட்டோம். கண்ணியம்காப்பவர்கள் அதிமுகவினர்.

வேறு யாரேனும் சட்டசபையில் எதையாவது செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார் ஜெயலலிதா.

உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறியிருப்பதுகுறித்துக் கேட்டபாது,

சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் மூட வேண்டாமா? உள்ளேயே இருக்க முடியுமா என்ன?

சட்டமன்ற ஊழியர்களுக்கு குடும்பம், வீடு உள்ளது. அவர்கள் வீட்டுக்கு போக வேண்டாமா? சாப்பிடவேண்டாமா?

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினால், அத்தனை பேரையும் வெளியே தூக்கி வைத்துவிட்டு சட்டமன்றத்தைப் பூட்ட உத்தரவிடப்படும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+