வாஜ்பாய், கருணாநிதி இரங்கல்
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தி மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் நலனுக்காக அயராதுபாடுபட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
அவரது மறைவின் மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியை நாடு இழந்து விட்டது என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.
கருணாநிதி:
கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வாழப்பாடியாரின் மறைவு பெரும் துயரத்தைஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு இது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முரசொலி மாறனைப் பார்க்க சனிக்கிழமை தான் வந்திருந்தார்வாழப்பாடியார். என்னுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றார். இப்போது அவர் இல்லைஎன்பது பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சிறந்த நண்பராக விளங்கியவர் வாழப்பாடியார். அவரதுகுடும்பத்திற்கு, எனது சார்பிலும் திமுக சார்பிலும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
சோனியா காந்தி:
சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக விளங்கியவர்வாழப்பாடி ராமமூர்த்தி.
அவரது மறைவின் மூலம் செல்வாக்கு மிக்க தலைவரை காங்கிரஸ் இழந்து விட்டது என்று கூறியுள்ளார் சோனியாகாந்தி.
ஜெயலலிதா:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தவர் வாழப்பாடியார்.தொழிற்சங்கவாதியாக திறம்பட செயல்பட்டவர்.
தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட்டவர். அவரது இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
தமிழக ஆளுநர்:
வாழப்பாடியாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
வாழப்பாடியாரின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியை நாடுஇழந்து விட்டது.
அவருடைய மறைவு நாட்டுக்கும் தொழில்துறைக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என்று கூறியுள்ளார் தமிழகஆளுநர்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.கண்ணப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன், மதிமுக அவைத்தலைவர் எல். கணேசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சோ. பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலைவாழப்பாடியார் வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கருணாநதி இன்று காலை சென்றுஅஞ்சலி செலுத்தினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications