காவிரி நீர் நாளை மேட்டூர் வரும்
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விட்டதாக கூறப்படும் தண்ணீர் நாளை மேட்டூர்அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் கடுமையான சாடலைத் தொடர்ந்து கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட்டுள்ளது.கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 48 முதல் 52 மணி நேரங்களில் மேட்டூர்அணையை வந்தடையும். அந்தக் கணக்குப்படி நாளைக்குள் கபினி நீர் மேட்டூர் வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறித்து கர்நாடகத் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் தமிழகபொதுப்பணித்துறைக்கு வரவில்லை.
ஆனால் தற்போது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதைப் பார்க்கும் போதுகர்நாடகத் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருப்பது உறுதியாகிறது.
அணைக்கு வரும் நீரின் வரத்து விநாடிக்கு 12,288 கன அடியாக உள்ளது. வெளியேறும் நீரின் அளவு விநாடிக்கு2,334 கன அடியாகும்.
அணையின் நீர்மட்டம் 44.72 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
கடந்த ஆண்டு இதே நாளில் 76 அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு 46,758 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
-->












Click it and Unblock the Notifications